Editorial / 2026 மார்ச் 04 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (04) அன்று அதிகாலை பறிமுதல் செய்துள்ளனர்.
20,400 வலி நிவாரணி மாத்திரைகள், 4,800 வெளிநாட்டு வயாகரா மாத்திரைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியனவே கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சமாகும்.
கடத்தலுக்குப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருந்த ஒரு படகு மற்றும் இரண்டு எஞ்சின்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகள் வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர். இலங்கையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவை கடத்தப்படவிருந்தது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
15 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
1 hours ago