Editorial / 2025 மே 06 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் தனது முச்சக்கர வண்டியில் வாக்காளர்களை, செவ்வாய்க்கிழமை (06) ஏற்றி, இறக்கிய தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்காளர்கள் பலரை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றி இறக்கி கொண்டிருந்த போது, உங்கள் வாக்குகளை தனது கட்சிக்கு அளிக்குமாறு வலியுறுத்தியதாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் சென்ற தேர்தல் திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சந்தேகநபர், தமிழரசு கட்சியின் உறுப்பினர் என அறியமுடிகிறது. கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .