2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த சாரதி கைது

Janu   / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் டிப்போவில் கடமையாற்றும் சாரதி ஒருவர் தபால் வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது வாக்குச் சீட்டை கையடக்கத் தொலைபேசியூடாக புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் இடம்பெற்ற தபால் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய டிப்போ  உப முகாமையாளரான முகமது அனிபா அன்வர் சதாத் என்பவர் மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்குத் தாக்கல் செய்ய பணிப்புரை கிடைக்கும் வரை சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .