Freelancer / 2024 நவம்பர் 13 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது, அரசடி வீதி, வட்டு. தெற்கு, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இந்நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை முந்திச் செல்வதற்கு முயற்சித்துள்ளார். அப்போதே அந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .