Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசங்கத்தில் இருந்து விலக வேண்டுமென்று, இன்று (13) ஜனாதிபதியிடம் கடிதமொன்று கையளிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைக்கு அமையவே, இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, குறித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் பல்வேறு கலந்துரைடல்களை மேற்கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகாவிடின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டு இது குறித்து தீர்மானமொன்றை எடுப்பதற்கு, குறித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago