2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த,  10 மாடிகளைக் கொண்ட  சிறுநீரக விசேட சத்திரசிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வரும், நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை சுகாதார அமைச்சு இதுவரை வழங்காமைக் காரணமாகவே, இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வரும்  நிறுவனத்துக்கு பணம் வழங்கப்படவுள்ள விடயம் உண்மை. இது தொடர்பில் சுகாதார பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பணத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய இன்னும் 2 வாரங்களில் பணம் வழங்கப்படுமென உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .