2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வியாழன்று தேசிய துக்கதினம்

Kanagaraj   / 2015 நவம்பர் 08 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியை நடைபெறும் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

அன்னாரது இறுதி கிரியை பூரண அரச மரியாதையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இடம் பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், இன்றுக் காலை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அங்கிருந்து இன்றிரவு நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X