Freelancer / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெண்டலியத்த, ராகம, பலுவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதைப்பொருள், சுமார் 10 கோடி ரூபாய் பணத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், 8.168 கிலோ போதைப்பொருள், 666 கிராம் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 823 000 ரூபாய் பணம், மூன்று மின்சார ஸ்கூட்டர்கள், ஒரு வேன், ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி, பல உரிமத் தகடுகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு சந்தேக நபர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் அறிவுடன் இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .