2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

123 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார் எஸ்.பி

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவைப் போலவே மேலும் 123 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்.பி. திசாநாயக்க தொலைபேசி மூலம் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி மாறுவதற்காக பணம் வழங்கப்பட்டு உறுப்பினர்கள் அழைக்கப்பட்ட சம்பவம் குறித்து பாலித ரங்கே பண்டார தொடர்ந்தும் பல தகவல்களை வெளிப்படுத்தியதைப் போன்று, அவரிடம் உள்ள ஏனைய தகவல்களையும் வெளிப்படுத்துவதாக பொதுஜன பெரமுன விடுத்த அறிவிப்பையடுத்து பாலித ரங்கே பண்டார அமைதியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி மாறுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு ஆரம்பத் தொகை கிடைத்த சில உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த பணத்தை எண்ணுவதற்காக இயந்திரங்களைப் பயன்படுத்தியதுடன் சில உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த பணம் உண்மையான பணமா என்பது குறித்து தெரிந்துக்கொள்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்ததாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .