2025 ஜூன் 23, திங்கட்கிழமை

166 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறியக் குற்றச்சாட்டில், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் 166 பேரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

குறித்த முகாமில் 36 பேர் தங்கியிருப்பதற்கான வசதிகளே காணப்படுவதால், இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால், குறுகிய காலத்துக்குள் அவர்களை, அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .