Freelancer / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதே தனது முதன்மைப் பணியென புதிய வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
வெகுசன ஊடக அமைச்சின் புதிய அமைச்சராக, வெகுசன ஊடக அமைச்சில் தனது கடமைகளை இன்றைய தினம் (16) பொறுப்பேற்ற பின்னரே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெகுசன ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெருமவை இன்று (16) நியமித்திருந்தார்.
இதற்கு முன்னர் டலஸ் அழகப்பெரும மின்சக்தி அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago