2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

36ஆவது மரணம் பதிவானது

Editorial   / 2020 நவம்பர் 09 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 36ஆவது கொரோனா மரணம், கந்தானையில் இடம்பெற்றுள்ளது

கந்தானையைச் சேர்ந்த 84வயதான பெண்ணொருவர், தனியார் வைத்தியசாலையில் இருந்து, “ஐடிஎச்” க்கு மாற்றப்பட்ட போதே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக நோய்வாய் பட்டிருந்த அந்தப்பெண், கொவிட் நிமோனியா நிலைக்குச் சென்றமையால் மரணமடைந்துள்ளார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம், இலங்கையில் கொவிட்-19 இல் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களில் 36ஆவது மரணமாகுமென வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X