Freelancer / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ 2,000 உதவித்தொகை இன்று (30) வரை 7,27,339 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டை மூடியதால் வருமான ஆதாரங்களை இழந்த மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எந்த கொடுப்பனவையும் பெறாத குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 1.8 மில்லியன் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago