Editorial / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்
திருகோணமலை , புல்மோட்டை , அன்வாருல் உலூம் அரபுக்கல்லூரிக்கு, குளியலறை மற்றும் மலசலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் தலைமையில் நேற்று (07) இடம்பெற்றது.
இதற்காக, இரண்டு மில்லியன் ரூபாவை நிதியினை கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஏ.பி.தௌபீக், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.ஐ.பதுர்தீன், எச்.எம்.சல்மான் பாரிஸ் மற்றும் அன்வாருல் உலூம் அரபுக்கல்லூரி தலைவரும், அமைச்சரின் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கான இணைப்பாளருமான அல்ஹாபீல் ஏ.எம்.எம்.றியாஸ் மௌலவி, கல்லூரியின் மௌலவிமார்கள்,மத்ரஷா மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .