2025 மே 14, புதன்கிழமை

ஆமைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

ஒன்பது ஆமைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு  20 ஆயிரம் ரூபாயை அபராதமாக திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று விதித்துள்ளார்.

மேற்படி ஆமைகளை விற்பனை செய்வதற்காக  இச்சந்தேக நபர் கொண்டுவந்து, நிலாவெளியிலுள்ள ஹோட்டலொன்றில் மறைத்து வைத்துள்ளார்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன், ஆமைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .