2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

கசிப்பு, சாராயம் வைத்திருந்த இருவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கடுங்கொல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு, சாராயம் வைத்திருந்த  இருவர், நேற்று (02) இரவு புல் மோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 51, 53 வயதுடைய சந்ததேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக,  பொலிஸாரின் விசாரணையிலிந்து ​தெரியவந்துள்ளது.

இதன் போது, ஒருவரிடமிருந்து 3250 மில்லி லீற்றர் கசிப்பும், மற்றைய நபரிடமிருந்து 375 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், தற்போது  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை குச்சவெளி சுற்றுளா  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, புல்மோட்டைப் பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X