Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட பாலத்தோப்பூர் கிராமத்தில் கடனை திருப்பிக் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படும் 45 வயதுடைய ஒருவரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸில் கடன் கொடுத்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். 10 ஆயிரம் ரூபாவை கடனாகப் பெற்ற சந்தேக நபர் 7,500 ரூபாவை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி 2,500 ரூபாவை திருப்பிக் கொடுக்க மறுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே மேற்படி சந்தேக நபரை கைதுசெய்துள்ளடன், இவரை நாளை புதன்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
47 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
2 hours ago