2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கருங்காலி மரக்குற்றிகளுடன் சாரதி கைது

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில் 7 கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனச் சாரதியை, நேற்று (26) கைதுசெய்ததாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வான்எல, சூரியபுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X