Princiya Dixci / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் வர்த்தக பீடத்துக்கு சிறப்பு கணக்கெடுப்பு நடத்தவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் பெற தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், பீடத்தின் பீடாதிபதி டொக்டர் எஸ்.கணபாலனிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், பீடாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை ஆளுநர் விடுத்தார்.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்புக்குத் தேவையான நிலத்தின் அளவு மற்றும் இலவச கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் அளவு குறித்து தொடர்புடைய அறிக்கை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
கால்நடை வளர்ப்புக்குத் தேவையான நிலங்களை அடையாளம் கண்டு, மீதியை விவசாயத்துக்காக ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த சிறப்பு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago