Janu / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தினுடன் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட குழுவினரது சந்திப்பு கிண்ணியா நகர சபையில் திங்கட்கிழமை (27) இடம் பெற்றது.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ,கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளர், உறுப்பினர்களான சனான் முகமட், நிஸார்தீன், ரசாட் முகமட், வேந்தன் மற்றும் தீசன் என பலர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது கிண்ணியா நகர சபை தற்போது முகம் கொடுக்கின்ற சவால்கள், எதிர்கால வேலை திட்டங்கள், கழிவு முகாமைத்துவ நிலைய பிரச்சினைகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.
ஏ.எச் ஹஸ்பர்

28 minute ago
30 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
57 minute ago