Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரட்சியால் பாதிக்கப்பட்ட, திருகோணமலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பன இணைந்து வழங்கிய உழவு இயந்திர எஞ்சின் பொருத்தப்பட்ட பவுசர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவால், இன்று (11) வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல், கிண்ணியா, கந்தளாய், கோமரங்கடவெல மற்றும் பதவிசிறிபுர ஆகிய 5 பிரதேச செயலகங்களுக்கே, இவை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபருடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
29 minute ago
31 minute ago