எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஜயந்திபுரப் பகுதியில்,எண்ணூற்றி ஐம்பது மில்லி கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை ஜயந்திபுரப் பொலிஸார் நேற்று(21) மாலை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சூரியபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரையே கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த சந்தேகநபரை தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, இவரை கந்தலாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .