Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எப். முபாரக் / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 900 ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நான்கு இளைஞர்களை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று(10)உத்தரவிட்டார்.
அன்புவழிபுரம்,காந்தி நகர்,நித்தியுபுரி,மற்றும் வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த 22,19,21,மற்றும் 20 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் திருகோணமலை மயான வீதியில் கேரளா கஞ்சா 900 ஆயிரம் மில்லிகிராமை வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை(9) மாலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நான்கு இளைஞர்களையும் பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
49 minute ago