2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கொரியமொழி பயிற்சிக்காக 38 மாணவர்கள் இணைவு

Kogilavani   / 2016 ஜூன் 20 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணம், வவுனியா மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களிலிருந்து கொரிய மொழி பயிற்சிக்காக 38 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திருகோணமலை,  மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, அநூராதபுரம் பிரதேசங்களிலிருந்தே 38 மாணவர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், கொரிய மொழி புத்தகங்களை வழங்கும் நிகழவும் ஞாயிற்றுக்கிழமை(19)   கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மகரூப் கலையரங்கில் இடம்பெற்றது.

கொரிய மொழி- தமிழ்மொழி  பயிற்சிக்குப் பொறுப்பான ஆசிரியர் ரீ.ஏ.பைரூஸ் தலைமயில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .