2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, மூதூர் கங்கையாற்றில், சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, மூதூர்  நீதிமன்ற  நீதவான் ஐ.எம்.றிஸ்வான், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபரை, செவ்வாய்க்கிழமை (02) பொலிஸார், மணலுடன் கைப்பற்றிய டிப்பரையும்; நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, நீதவான் மேற்கண்ட அபராதத்தை விதித்தார்.

மணல் அரசுடமையாக்கப்பட்டதுடன் டிப்பர்  இயந்திரம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X