Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர், லங்கா பட்டனத்தில் வைத்து, ஜீப் வண்டியால் மோதி, 5 வயதுச் சிறுமியை காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன், இன்று (27) உத்தரவிட்டார்.
சம்பூர், லங்காப்பட்டணத்தில் நேற்று (26) இடம்பெற்ற இவ்விபத்தில் குறித்த சிறுமியின் இரு கால்களும் படுகாயங்களுக்குள்ளாகின.
மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தச் சிறுமி, தற்போது மேலதிகச் சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
5 hours ago