2025 மே 01, வியாழக்கிழமை

சுகாதாரத் தொண்டர்கள் கண்டனப் போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ. ஆர்.எம்.றிபாஸ்

சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாட்டிய  35 பேருக்கான நிரந்தர நியமனம் கோரி, அளுநர் அலுவலகத்துக்கு முன்னால்  இன்று (11) காலை 11 மணியளவில் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 10 வருடங்களாகத்  தொணடர்களாகக் கடமையாற்றி இதுவரை காலமும் நியமனம் வழங்கப்படவில்லை எனவும் அரசியில் தலையீட்டினால்  அரசியல்வாதிகளுக்கு சார்பான ஆதரவாளர்களுக்கு நியமனம்  வழங்குவதாகவும், போராட்டத்தை முன்னெடுத்தோர் தெரிவித்தனர்.

இதன்போது, ஆளுநரைச் சந்தித்து மகஜர் கையளித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆளுநர்  ஐந்து நாள்கள் அவகாசம் கேட்டதாகவும் இதற்கான முடிவு வழங்கப்படாவிட்டால் தொடர்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .