2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

சூதாடிய ஐவரை சிரமதானப் பணியில் ஈடுபடுத்த உத்தரவு

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் கட்டைபறிச்சான் காட்டுப்பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரையும் ஒவ்வொருவரும் 100 மணித்தியாலங்கள் படி பொது இடங்களைச் சிரமதானம் செய்யும் பணியில் ஈடுபடுத்துமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், புதன்கிழமை (18) உத்தரவிட்டார்.

குறித்த காட்டுப்பகுதியில் சூதாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அக்காட்டுப்பகுதியைச் சுற்றிவளைத்தபோது, இவர்கள் ஐந்து பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .