Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு பிரிவினரிடையே இன்று (02) ஏற்பட்ட காணிச்சண்டை கைகலப்பாக மாறியதில், நால்வர் காயமடைந்துள்ளனரெனவும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும், ஜயந்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
ஜயந்திகம மற்றும் சமகிபுர பகுதியைச் சேர்ந்த 44, 37, 54, 60 வயதுடைய நால்வரே, காயமடைந்த நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஜயந்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
ஜயந்திபுர பிரதேசத்தில் காணிகளை அளவிடுகின்ற போது பொதுக்கல், குறித்த ஓர் இடத்தில் இடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் வேறு ஒரு இடத்தில் இடம்பட வேண்டுமென மற்றொரு சாராரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாய்த்தர்க்கம், இறுதியில் கைகலப்பாக மாறியதில் மேற்படி நால்வர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், காணிச் சண்டையில் முக்கியமாகத் தொடர்புடைய இருவரை கைதுசெய்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஜயந்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago