Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 27 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், கீத்
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு, தேன் எடுக்கச் சென்ற சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் (19 வயது) என்ற மாணவன், நேற்று (26) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவெளி, கைலேஸ்வரன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்த இவர், குடும்ப கஷ்டநிலை காரணமாக, விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில், மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார்.
16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது, மரத்தின் கிளை இவர் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். றூமி சென்று பார்வையிட்டதுடன், சடலத்தை, சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு, பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
சடலம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago