Thipaan / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், வடமலை ராஜ்குமார், எம்.முபாரக், பதூர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடவியலாளர்களின் வகிபங்கு எனும் தொனிப் பொருளில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, திருகோணமலை ஜெகப்பாக் ஹோட்டலில் இன்று (01)இடம் பெற்றது.
இலங்கை பத்திரிகை பேரவையும், திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இச்செயலமர்வில் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் பிரதம அதீதியாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வின் வளவாளர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி கொக்கல வெல்லால பந்துல, சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.



20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026