Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ஜமாலியாப் பகுதியில் நேற்றுக் (17) காலை இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் 3 பேர் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் சைக்கிள் திருத்தும் கடையும்; பலசரக்குக் கடையும் அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில், சைக்கிள் திருத்தும் கடைக்கு முன்பாக பலசரக்குக் கடை உரிமையாளர் குப்பை கொட்டுவது தொடர்பில் மேற்படி இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் இடையில் பிரச்சினை காணப்பட்டு வந்துள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அதன்போது, உடைந்த போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும்இரண்டு தரப்பினரையும் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
ஜமாலியாப் பகுதியைச் சேர்ந்தவர்களான மீராமுகைதீன் உமர் ஜௌபர் (வயது 64), அவரது மகனான உமர் ஜௌபர் தௌகீத் (வயது 21) மற்றும் ஐ.எம்.பஸீர் (வயது 45) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025
20 Jun 2025