Princiya Dixci / 2016 ஜூலை 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
1983 ஆம் ஆண்டிலிருந்து படையினரால், திருகோணமலை, குச்சவெளி, புல்மோட்டை, சாம்பற்தீவு, முச்சந்தி, நிலாவெளி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் மற்றும் பொதுக்காணிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனை முகாங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
சோதனை முகாங்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டமையினால் அப்பகுதி வெறிச்சோடிப் போய் உள்ளதுடன், மக்கள் அச்சமின்றி அப்பகுதியில் நடமாடக்கூடியதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

50 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
21 Mar 2026