Mayu / 2024 ஜூன் 19 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகரில் நடைபாதை வியாபாரத்தை தடைசெய்ய கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள் புதன்கிழமை (19) காலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியற்ற நடைபாதை வியாபாரத்தை உடனடியாக நிறுத்த அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர். தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளித்தனர்.
அ . அச்சுதன்

6 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
15 Nov 2025