Editorial / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட், பி.எம்.எம்.ஏ.காதர்
கந்தளாய் குளத்தில் மூழ்கி, கல்முனை, பாண்டியிருப்பு பகுதியைச் சேர்ந்த முஹம்மட் ஜவ்பர் பாஹீம் முஹம்மட் (20 வயது) எனும் இளைஞன், இன்று (12) காலை உயிரிழந்துள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பிரதேசத்துக்கு மார்க்க கல்வியை கற்பதற்காக ஜமாத் கடமைக்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் சிலர், குளத்தில் குளிக்கச் சென்ற வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம், கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025