Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 30 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
புல்மோட்டை, ஜின்னாநகர்ப் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டாகக் கொழுத்திய பட்டாசு வெடித்ததில், கண்பகுதியில் காயமடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை, திருகோணமலை பொது வைத்தியசாலையில், நேற்றுப் புதன்கிழமை மாலை (29) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த இத்ரீஸ் முகம்மது சப்ரி என்ற குழந்தையே படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அந்தக் குழந்தையின் 12 வயது அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது, பட்டாசு கொழுத்தியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான குழந்தை, புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட குழந்தை, தற்பொழுது கண் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
41 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago