Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸைச் சேர்ந்த 21 வயது யுவதி தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து, பாலியல் சேட்டை புரிந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அக்குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட 23 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
திருகோணமலை, டைக் வீதியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த மேற்படி யுவதி தங்கியிருந்த விடுதிக்கு அருகிலுள்ள விடுதியிலேயே, பல்கலைக்கழக மாணவனான குறித்த இளைஞனும் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, யுவதி தங்கியிருந்த அறைக்குள் புகுந்த இளைஞனர், யுவதிக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்யதாக, துறைமுக பொலிஸ் நிலையத்தில், புதன்கிழமை (20) அதிகாலை 2 மணியளவில், யுவதியால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட துறைமுக பொலிஸார், மாத்தளை- அலுவிஹார பகுதியைச் சேர்ந்த இனைஞனைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago