ஒலுமுதீன் கியாஸ் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேண்தகு அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் ஊர்வலமொன்று, கிண்ணியா அல் அஹ்லா வித்தியாலய ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வித்தியாலய அதிபர் கே. பிர்தெளஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், “போதைப்பொருட்களில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்போம்”, “பொலித்தீன் பாவனையில் இருந்து சூழலைப் பாதுகாப்போம்”, “டெங்கில் இருந்து உயிரைப் பாதுகாப்போம்” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .