2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புஹாரி நகர் பாடசாலை வீதி புனரமைப்பு

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை வீதியின் புனரமைப்புப் பணிகள், இன்று திங்கட்கிழமை (07)  காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த வீதியின் புனரமைப்புப் பணிகளுக்கென, 6.5 மில்லியன் ரூபாய் நிதி, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .