Editorial / 2017 ஒக்டோபர் 14 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிருகவதையை ஏற்படுத்துவதாக, ஆடுகளை டொல்பின் வானொன்றில் கொண்டு சென்ற இருவர், வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த 25, 32 வயதுடைய இருவரே கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள், தோப்பூர் மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் இருந்து 59 ஆடுகளை கொழும்புக்கு டொல்பின் வானில் ஏற்றிச் சென்ற போது, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .