2025 மே 19, திங்கட்கிழமை

முச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களை திருடிய இளைஞன் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

கந்தளாய் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் உதிரிப்பாகங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பாத்தியாகம பாகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் முச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களைத் திருட்டுக் கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி கந்தளாய் தலைமை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டதன் அடிப்படையில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X