Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 10 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, 03ஆம் கட்டை பகுதியில் நேற்று சனிக்கிழமை (09) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், திருகோணமலை, பாலையூற்றில் வசிக்கும் எம்.எஸ்.நிதர்ஷனன்
(26 வயது) மற்றும் புளியம் குளம், நித்தியபுரியில் வசிக்கும் கே.சிவராஜா (50 வயது ) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது, அலைபேசியில் உரையாடிய வண்ணம் சென்றதாகத் தெரிவித்த பொலிஸார், கவனயீனமாக மோட்டார் செலுத்திய குற்றத்துக்காக, சாரதிகள் இருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago