Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கொலனி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் வினோ (வயது 36) என்ற குடும்பஸ்தர், நேற்று (19) மாலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த நபர், மாடு பார்ப்பதாக காட்டுப் பகுதிக்குச் சென்று மாலையாகியும் வீடு சேரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினரும் அயலவர்களும் தேடுதல் மேற்கொண்டபோது, அவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி காட்டுப் பகுதியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
சடலம், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago