Thipaan / 2016 நவம்பர் 07 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
அதிசக்தி வாய்ந்த ரி.என்.ரி வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அறுவரையும், எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, சந்தேகத்தின் பேரில், மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரும் கிண்ணியாவைச் சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிடம், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் 17 கிலோகிராம் 700 கிராம் ரி.என்.ரி வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.
அவர்களை, மூதூர் நீதிமன்றத்தில், இன்று ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago