2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

எப். முபாரக்   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வான் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, கப்பல்துறை பகுதியில் நேற்று (24)  இரவு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார்  மேலும் தெரிவிதத்னர்.

இதன்போது, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த எஸ்.வை.துஸ்யந்தன் (வயது 32) மற்றும் எம்.சாகரன் (வயது 21) ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து தம்புள்ளைக்குச் சென்ற முச்சக்கரவண்டியும்,கொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற வானும் வளைவுவொன்றில் வைத்து நேருக்கு நேர் மோதியதிலேயே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X