2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞர்கள் இருவர் காயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று (12)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற ஏ.எம்.இர்ஸாத் அஹமட்  (வயது 22) என்பவர் செலுத்திச் சென்ற  மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் குறித்த இளைஞனும் அவருடன் சென்ற எம்.அஹமட்கான்  (வயது 25) என்பவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X