2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரொருவர் படுகாயமடைந்து, கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயதிலக்க தனுக்க (வயது 30) என்பவரே படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X