2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் நீதிமன்ற பதிவாளர் படுகாயம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் வவுனியா குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற பதிவாளர் படுகாயமடைந்த நிலையில் ஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து நேற்று (05) 4.30மணியளவில் இடம்பெற்றது.

திருகோணமலை, இல-73, மசூதி வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் (59 வயது) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து கடமையை முடித்து விட்டு திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளுடன் மாடு மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பதிவாளர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X