2025 மே 14, புதன்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்தூறு மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவர், நேற்று மாலை (22) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே, இவ்வாறு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஹெரோய்ன் வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கமைய, சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, ஐந்நூறு மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த வேளை, சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X