2025 மே 19, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பிரதான வீதியில் வைத்து, 8 கிராம் ஹெரோய்னுடன் நபரொருவரைக் கைதுசெய்துள்ளதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கந்தளாய் ஆரியவம்ச மாவத்தையைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார்,

ஹெரோய்ன் போதைப் பொருளுடன,; பிரதான வீதியில் நபரொருவர் நடமாடுவதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், இவரைச் சோதனைக்குட்படுத்திய போதே அவர், கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X